Friday, April 8, 2016

தேர்தல் களம் தமிழ் நாடு
இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வழக்குத் தமிழகத்தில் மட்டுமே. தேர்தலில் தி. மு. க அல்லது  அ தி மு க என்ற இரண்டு கட்சிகளுக்குள்ளான போர் தான் இங்கு தேர்தல் எனக் காணப்படுகிறது.
ஏன் மற்ற மாநிலங்களைப் போலல்லாது இம்மாநிலத்தில் மட்டும் இவ்வாறு உள்ளது என்ற கேள்விக்குச் சரியான பதில் இதுவரை இல்லை.

இரண்டுகட்சிகளுமே ஊழல் பெருச்சாளீகள் நிறைந்தவை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் ஏன் ஒரு மாற்றுக் கட்சியைத் தமிழகத்தில் காண இயலவில்லை?

தேசீயக் கட்சிகள் ஏன் தமிழகத்தில் தமது பங்கை நிலைநாட்ட  முயலவில்லை?
எனது வடமாநிலத்து நண்பர் ஒருவர் கூறியது.
“தமிழர்கள் இலவசப் பொருள்கள் வாங்குவதிலும் வோட்டுக்கு விலை பேசுவதிலும் தான் குறியாக உள்ளார்கள். ஆகையால் அதற்கான வழிமுறையை உண்டாக்கி அம்முறையை சீராக நடத்திச் சென்று ஏமாற்றக் கூடிய கட்சிகள் இவை இரண்டுதாம். இதை வங்காளத்திலோ ஒரிஸ்ஸாவிலோ ஏன் பார்க்க முடிவதில்லை? பார்க்கப்போனால் இந்த இரண்டு மாநிலங்களும் தமிழகத்தி விட் மிக்ப் பின் தங்கியவையே!”

அப்ப்டியெனில் தமிழர்கள் இலவசப் பொருள் வாங்குவதில் தான் நாட்டமுடையவர்களா? தமது நாகரீகம் தான் உலக்த்திலேயே முதியது என்று பேசுகையில், இவர்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார்கள்?

டாஸ்மாக் மூலம் தமிழகமே ஒரு பெரும் மது கேந்திரமாக உள்ளது. இலவசப் பொருட்களல் மக்கள் சோம்பேறிகளாகின்றர்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனா. இவற்றைச் செயல் படுத்தும் கட்சிக்குத் தான் ஆதரவு தருகின்றார்கள்.

அப்படியெனில் தமது சுய செயல்பாட்டை இழந்தவர்களா தமிழர்கள்?
நரசய்யா


No comments: